×

பெரம்பலூர் மாவட்டத்தில் மே 3ம்தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

 

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 3ஆம்தேதி நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் தலைமையில், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வரும் மே3ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க சான்றுகளுடன் நேரில் அளி க்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்டஅலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியி ன் அடிப்படையில் நலத்தி ட்ட உதவிகள் வழங்க ஆவ ணச் செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச் சிறப்பு குறைதீர்க்கும் மு காமில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என மாவ ட்டக் கலெக்டர் கற்பகம் வெ ளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் மே 3ம்தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Md ,Perambalur District ,Perambalur ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...